for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Press Releases

13 May 2026 மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாண்புமிகு முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை வெற்றிகரமாக பணியை கொண்டுசெல்ல மக்கள் கண்காணிப்பகம் வாழ்த்துகிறது. Press Releases Madurai

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாண்புமிகு முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை வெற்றிகரமாக பணியை கொண்டுசெல்ல மக்கள் கண்காணிப்பகம் வாழ்த்துகிறது. 2018 மே 22, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிலும் தொடர் நிகழ்வுகளிலும் 16 பேர் பலியான நினைவு தினத்தில் கடந்த தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றாமல் போன கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற...

##HenriTiphagne, ##People'sWatch, ##PW, ##TVK, ##CMVijay, ##TNCM, ##Police, ##PoliceTorture, ##CustodialDeath, ##tamilnews
13 May 2026 People's Watch wishes to warmly congratulate the Honourable Chief Minister, Thiru. C. Joseph Vijay, on successfully carrying out his duties as the new Chief Minister by respecting democratic norms, adhering to social justice principles and the rule of law Press Releases Madurai

People's Watch wishes to warmly congratulate the Honourable Chief Minister, Thiru. C. Joseph Vijay, on successfully carrying out his duties as the new Chief Minister by respecting democratic norms, adhering to social justice principles and the rule of...

##HenriTiphagne, ##PW, ##People'sWatch, ##JAACT, ##TVK, ##CMVijay, ##ActorVijay, ##TNCM, ##CustodialDeath, ##PoliceTorture, ##CurrentNews
2 Jul 2025 Custody Death: 30 sec வீடியோ; சரண்டர் ஆன அரசு தரப்பு; நீதிமன்றத்தில் என்ன நடந்தது? - ஹென்றி திபேன் Press Releases Madurai

Custody Death: 30 sec வீடியோ; சரண்டர் ஆன அரசு தரப்பு; நீதிமன்றத்தில் என்ன நடந்தது? - ஹென்றி திபேன் அந்த வீடியோவை எடுத்த சக்தீஸ்வரனையும் நீதிமன்றத்துக்கு சாட்சியாக அழைத்து வந்தோம். அவரும் அந்த கோவிலில்தான் பணியாற்றுகிறார். அஜித் குமாரின் தூரத்து சொந்தக்காரர் அவர். அந்த வீடியோவை எடுக்கும்போதே பதைபதைப்புடனும் அச்சதோடும்தான் எடுத்திருக்கிறார்." - ஹென்றி திபேன். .................................................................

##Vikatan, ##ajithcase, ##ajithkumarcase, ##justiceforajith, ##Ajithdeath, ##CustodialDeath, ##thiruppuvanam, ##sivagangai, ##Madappuram, ##DeathinCustody, ##PoliceTorture, ##policebrutality, ##HighCourt, ##MaduraiHighCourt, ##MadrasHighCourt, ##HenriTiphagne, ##Henri, ##Tiphagne, ##ஹென்றி, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##போலீஸ், ##சித்திரவதை, ##காவல்மரணம், ##காவல்சித்திரவதை, ##காவல்கொலை, ##tamilnadupolicebrutality, ##stoppolicetorture, ##HenryTiphagne, ##henrydeepan
15 Jun 2024 நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் நடத்தியதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்திய கொடூர தாக்குதல் மற்றும் அலுவலகம் அடித்து சூறையாடப்பட்ட சம்பவத்தை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது Press Releases

மனித உரிமையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தாக்குதலில் காயப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெல்லையில் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்கப்பட வேண்டும்.  சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்யும் நோக்கோடு பெண் வீட்டார் செயல்பட்டுள்ளனர். என்பதனை அறிய முடிகிறது எனவே காதல் திருமணம் செய்த இருவருக்கும் நிரந்தரமான பாதுகாப்பை வழங்கியும், இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு பணியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #HRDA, #HRD, #Human Rights Defenders Alert, #மனித உரிமைக் காப்பாளர், #மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு
28 Nov 2023 கோவை, துடியலூர், அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுமியின் மீது வெறுப்புணர்வோடு நடந்து தாக்குதல் நடத்திய பயிற்சி ஆசிரியையை விசாரணைக்கு உட்படுத்துக. பயிற்சி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர Press Releases

கல்வி நிலைய வளாகங்களில் மதரீதியான அச்சுறுத்தல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான கல்வி பல்வேறு சமூக காரணங்களால் தடுத்து நிறுத்தப்படும் சூழல் நமது சமூகத்திற்கு அபாயகரமானதாகும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உணவு, உரிமை குறித்து கேள்வி எழுப்புவது குழந்தைகள் உரிமை மீறலாகும். இதுபோன்ற சூழல் பள்ளிகளில் வளர்ந்துவிடக்கூடாது. எனவே குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறலில் ஈடுபட்ட பயிற்சி ஆசிரியை அபிநயா என்பவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பயிற்சி ஆசிரியை அபிநயா மற்றும் வகுப்பு ஆசிரியர் ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை இராஜேஸ்வரி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோரை இடைநீக்கம் செய்யவேண்டும். ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமியின் மீது நடந்த உரிமை மீறல் சம்பவம் குறித்து மாவட்ட அளவில் உள்ள குழந்தைகள் நலக்குழு (CWC) மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் (DCPO) ஆகியவற்றில் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை கேட்கவேண்டும். பாதிக்கப்பட்ட ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமி பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று கல்வியினை தொடர்வதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

#media
27 Nov 2023 போக்ஸோ (POCSO) வழக்கில் பாதிப்பிற்குள்ளான சிறுமியை கை விலங்கிட்டு பெண் காவலர் அழைத்துச் சென்ற சம்பவத்தினை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து (Suo-Moto) விசாரிக்கக் கோரி மக்கள் கண்காணி Press Releases

கடந்த 21.11.2023 அன்று மாநிலம் முழுவதும் செய்தித்தாள்கள், ஊடகங்கள் வாயிலாக பரவி வரும் செய்தியில், 07.11.2023 அன்று பெண் காவலர் ஒருவர், போக்ஸோ (POCSO Act) வழக்கில் பாதிக்கப்பட்ட 15 வயதான சிறுமியிடம் 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெறுவதற்காக, ஊட்டியில் உள்ள அன்னை சத்யா இல்லத்தில் இருந்து கோத்தகிரியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட 15 வயதான சிறுமியுடன் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இறங்கிய பெண் காவலர் சிறுமியின் கைகளில் விலங்கிட்டு, கிட்டத்தட்ட 400 மீட்டர் நடந்தவாறு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். நீதிமன்ற வாசலில் மட்டும் கை விலங்கை அகற்றி, 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெற்றவுடன், மீண்டும் அச்சிறுமிக்கு கை விலங்கிட்டு, பொது சாலையில் பேருந்து நிலையம் வரை நடக்க வைத்தது என்பது மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கிறது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன் வந்து (Suo-Moto)  இவ்வழக்கினை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பியதோடு, மனித உரிமைகள் திருத்தச் சட்டம், 2019 பிரிவு 12 (A) இன் கீழ் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கும் தாமாக முன் வந்து (Suo-Moto)  விசாரணைக்கு எடுக்குமாறு மக்கள் கண்காணிப்பகம் 25.11.2023 அன்று மனு அனுப்பிள்ளது.  

#media
25 Nov 2023 People’s Watch appeal to the Hon’ble Chief Justice of Madras High Court and Chairperson of Tamil Nadu Human Rights Commission to take suo-moto action in the case of POCSO victim hand cuffed by women police Press Releases

People’s Watch sent representation to seeking suo-moto action to Chief Justice of Madras High Court and urged Tamil Nadu State Human Rights Commission to take suo-moto cognizance under section 12 (a) of the Protection of Human Rights (Amendment) Act,...

#media
6 May 2023 இந்திய காவல் பணி அதிகாாிகள் சங்கத்திற்கு மக்கள் கண்காணிப்பகத்தின் திறந்த மடல் Press Releases

தாங்கள், கடந்த 04.04.2023 அன்று "திரு.பல்வீர்சிங் I.P.S., என்பவருக்கு எதிராக காவல் நிலைய சித்திரவதை குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீடியா டிரையல் (Media Trial) நடக்கின்றது" என்ற தலைப்பில், பொதுநல நோக்குடன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தீர்கள். அந்த அறிக்கையை இன்னாருக்குத் தான் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் "அன்பான எல்லோருக்கும்" என்று விளித்து வெளியிட்டிருந்தீர்கள். ஆகவே தாங்கள் அந்த அறிக்கையை எங்களுக்கும் சொன்னதாகக் கொண்டு, தற்போது அந்த உரிமையோடு, தாங்கள் எப்படி வெளிப்படையாக திரு. பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான உங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் பகிர்ந்தீர்களோ! அதே போல் நாங்களும் திரு.பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான எங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் வெளிப்படையாக பகிர்கின்றோம். எங்களின் இந்த அறிக்கையை தங்களுக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையானது தமிழ்நாட்டிற்கு முற்றிலும் புதியதாகும். தமிழ்நாட்டில் இவ்வாறு காவல் நிலைய சித்திரவதைகள் தொடர்பான பிரச்சனைகள் வெளிப்பட்டு வரும் போது அவை தொடர்பாக "காவல்துறை அதிகாரிகளின் சங்கம்" என்ற பெயரில், யாரும் அதில் தலையிட்டு கருத்து சொன்னதில்லை. எனவே முதன்முறையாக, அதுவும் காவல்துறையின் உயர்கல்வித் தகுதியான I.P.S தகுதி பெற்ற அதிகாரிகள் அடங்கிய சங்கத்தின் பெயரில் இப்படி ஒரு அறிக்கை வந்தது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அல்லாத அதிகாரிகள் என்று இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இப்பிரிவினை ஆரோக்கியமானதல்ல. இப்பிரிவினையை தங்களது அந்த அறிக்கை பெரிதாக்கிவிட்டதாகவே உணர்கிறோம்.

#media


Join us for our cause