Media
முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க கோரி மதுரையில் மனித சங்கிலி போராட்டம் – திருமாவளவன் எம்.பி., இயக்குநர் அமீர் பங்கேற்பு! முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க கோரி மதுரையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திருமாவளவன் எம்.பி., இயக்குநர் அமீர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், மதுரையில் மத நல்லிணக்க மரபை பாதுகாக்க வேண்டும், முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் மதுரை ராஜா முத்தையா மன்றம் பகுதியில் இருந்து காந்தி மியூசியம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது இந்த மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், இயக்குநர் அமீர் ஆகியோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். அவர்களுடன் மக்கள் அதிகாரம் கழகம், தமிழ் புலிகள் கட்சி, திராவிட கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிட தமிழர் கட்சி, திராவிட விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இஸ்லாமிய அமைப்புகள் என 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தன. மேலும் இதில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களைக் சார்ந்த குழந்தைகள் ஒற்றுமையாக வருவது போல அழைத்து வரப்பட்டு மனித சங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் வருகிற 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Attempt being made to disturb Madurai’s tradition of social harmony Madurai has a tradition of social harmony where equality and brotherhood is followed. The Sangh Parivar is conducting the Lord Murugan devotees conference in Madurai to disturb this...
BJP bid to create unrest via Murugan meet: Thiruma Madurai: VCK president Thol Thirumavalavan has accused BJP and Sangh Parivar of trying to use the names of Hindu deities to create unrest and disrupt religious harmony in various...
What RTI data reveals about custodial torture, lack of CCTV facilities in Tamil Nadu’s police stations While the Tamil Nadu police has been consistently lauded as among the best in the country, recent RTI information revealed that in...
‘Provide protection to activist under Witness Protection Scheme’ Principal District Judge S. Sivakadatcham has ordered protection to Madurai-based activist M. Gnanasekaran of Vadipatti who was facing threat from quarry operators. Gnanasekaran participated in protests against...
Transfer Balveer Singh case to Human Rights court, demand activists The Magistrate accepted the petition. Further, the magistrate directed the CB-CID's investigation officer to appear before the court in future hearings, rather than sending other personnel. TIRUNELVELI: People's...
விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் நெல்லை கோர்ட்டில் ஆஜர் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது வரை இந்த வழக்கில் பல் பிடுங்கிய ஆயுதங்களை கூட போலீசார் கைப்பற்றவில்லை ............... இதில் பாதிக்கப்பட்ட நபர்களின் தரப்பில் ஆஜரான வக்கீல் மாடசாமி, மாவட்ட தலைமை நீதிபதியால் விசாரிக்கப்படும் மனித உரிமை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கினை மாற்ற வேண்டும் என முதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி சத்யாவிடம் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேநேரம், இந்த இந்த கோரிக்கை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கை மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்ற ஒப்புதல் நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை, மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றும் மனு ஏற்கப்பட்டுள்ளது. ..................................... இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாடசாமி கூறும்போது, “இந்த விவகாரத்தில் மிகப் பெரிய மனித உரிமை மீறல் நடந்துள்ளது. எனவே இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இந்த வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறும் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.
விசாரணை கைதிகள் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீர் சிங் ஆஜர் ஏஎஸ்பி பல்வீா் சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெ ள்ளி க்கிழமை ஆஜரானாா் . திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா் சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா் . ............................................................................... பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மாடசாமி, இந்த வழக்கை மனித உரிமை மீறல் வழக்காக கருதி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். அது தொடா்பாக அளிக்கப்பட்ட மனுவையும் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஏற்றுக்கொண்டாா் .
பற்களை பிடுங்கிய வழக்கு நெல்லை கோர்ட்டில் பல்வீர் சிங் ஆஜர் நெல்லை: விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் இன்று நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஐபிஎஸ் அதிகாரி பல்வீர்சிங் ஆஜரானார்.அம்பை சப்-டிவிஷனில் ஏஎஸ்பியாக பல்வீர்சிங் ஐபிஎஸ் 2023ல் பணியாற்றினார். அப்போது விசாரணைக்காக சென்றவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார். மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. .................................................................... பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடிய மாடசாமி என்பவர் இந்த வழக்கை மனித உரிமை மீறல் வழக்காக கருதி, இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்து மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதி சத்யா பெற்றுக் கொண்டு சிபிசிஐடி போலீசாரிடம் இதுகுறித்து கேட்டார். ஆனால் சிபிசிஐடி போலீசார் மனித உரிமை வழக்கு குறித்து முன் கூட்டியே தெரிவிக்காததால், நீதிபதி சத்யா சிபிசிஐடி போலீசாரை கடிந்து கொண்டார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
