Media

கோகுல்ஸ்ரீ என்கிற 17 வயதான சிறுவன் 29.12.2022 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில் தாம்பரம் இரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளான். 30.12.2022 அன்று சிறுவனின் தாயார் பிரியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் தனது மகனை பார்த்து சென்ற பின், சிறுவன் கோகுல்ஸ்ரீ அரசினர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். இந்நிலையில் 31.12.2022 அன்று சிறுவன் கோகுல்ஸ்ரீ இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 01.01.2023 அன்று தாயார் தனது மகன் கோகுல்ஸ்ரீ உடலை பார்த்து, உடலில் ஏற்பட்டுள்ள கொடுங்-காயங்களை உடன் இருந்த மாஜிஸ்ட்ரேட்டிடமும், மருத்துவர்களிடமும் கூறியுள்ளார். 17 வயதான சிறுவன் கோகுல்ஸ்ரீ கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு முன் பகுதியிலும், பின் பகுதியிலும் காயங்கள் இருந்து, இடது பக்கம் கண்ணின் நெற்றியிலிருந்து வலதுபக்கம் கண்ணின் கீழ் கன்னம்வரை தடியால் அடிக்கப்பட்ட தடமும், கீழ் உதடு இரண்டாக பிளவுபட்ட நிலையிலும் கடும் சித்திரவதைக்கு ஆளாகி 176 (1) (A) பதிவு செய்து புலன் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இது போன்ற சித்திரவதைகள் நடந்து கொண்டே உள்ளது. இப்போது அந்த கூர்நோக்கு இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளை பார்வையிட்டு, சட்டைகளை கழற்றிப் பார்த்தால் அவர்களுக்கும் காயங்கள் இருப்பது தெரியும். ஆகவே இந்த வழக்கிற்கான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள கண்காணிப்பாளர், தலைமை வார்டன், உதவி வார்டன், தலைமைக் காவலர் மோகன், இரவு காவலர்கள் ஹானஸ்ட்ராஸ், சரண்ராஜ், விஜயகுமார், சின்னமுத்து, செவிலியர் நந்தகுமார், கோகுல்ஸ்ரீ தாயாரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று தங்களது வீட்டில் அடைத்து வைத்தவர்களான அங்கு பணி புரியும் சமையலர்கள் சரஸ்வதி, சாந்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு-DPCO) சிவக்குமார், இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளான மற்ற சிறார்களை மிரட்டுவது, மறைப்பது போன்ற வேலைகளைச் செய்து வருகின்றார். அவரோடு சேர்ந்து சமூக பாதுகாப்புத் இயக்குநர் திருமதி. வளர்மதி அவர்களும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு- DPCO) அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார். ஆகவே பொறுப்பு DPCO சிவக்குமார் அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்யும் வகையில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தை நேரடியாக பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளின் பாதிப்புகளை பதிவு செய்து, அதற்கு என்ன காரணம் என்று விசாரணை செய்யவேண்டும். அங்கு பணியாற்றும் ஆசிரியர்களாலும் சிறார்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சிறுவன் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட போது 4 சிறார்களையும் சேர்த்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். அவர்களும் கொடுங்காயங்களோடு உள்ளனர். அச்சிறார்களின் காயங்கள் ஆறுவதற்கு முன்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒரு மருத்துவக்கு குழுவுடன் எந்த தாமதமுமின்றி அங்கு சென்று ஆய்வு செய்யவும்கோருகிறோம். கொல்லப்பட்ட சிறுவனின் தாயையும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு- DPCO) சிவக்குமார் தொடர்ந்து மிரட்டி வருகிறார். அவரின் மிரட்டலை எவ்விதத்திலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எவ்விதத்திலும் அனுமதிக்காது பாதிப்பு ஏற்படுத்திய உறுதுணையாக செயல்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு. கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும் கோருகிறோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ஒரு சுதந்திரமாக செயல்படும் வகையில் தனி குழு ஒன்றை நியமனம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறுவர் கூர்நோக்கு இல்லங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடவும் கோருகிறோம். ஹென்றி திபேன் நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

பத்திரிக்கைச் செய்தி தலித் மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கொடுமையைச் செய்த குற்றவாளிகளைக் கைது செய்ய அரசியல் கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை அன்புடையீர், வணக்கம், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமம் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வரும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் ஆதிக்க சாதியினர் மலம் கலந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 2022 டிசம்பர் 25 அன்று அக்கிராம மக்களுக்கு அடுத்தடுத்து திடீர் உடல்நலக் குறைவும், ஒவ்வாமையும் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குடிநீரில்தான் பிரச்னை என்று கூறியவுடன் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அவர்கள் பயன்படுத்திவந்த 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்த போது மலம் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து 27.12.2022 அன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை உள்ளதையும், கோவில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதையும் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அடுத்து கோட்டாட்சியர் குழந்தைசாமி பாதிக்கப்பட்ட மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சம்பவம் நடந்து சுமார் 15 நாட்கள் கடந்த நிலையில் இது வரை குற்றவாளிகள் கைது செயயப்படாமல் இருப்பது ஏன்? மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில பெண்கள் உரிமை ஆணையம் போன்றவை இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏன்? அரசு சாரா அமைப்புகள் தான் இது பற்றி பேசி வருகின்றன. 21 ஆம் நூற்றாண்டிலும் சாதிய வன்மத்துடன் தொடரும் இக்கொடூரத்தை அரசியல் கட்சிகள் உடனடியாகக் கண்டனம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இத்துடன் குற்றவாளிகள் கைது செய்யப்படவும், கிராமத்தில் அமைதியான சூழல் நிலவவும் அரசியல் கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகிறோம். இச்சம்பவம் குறித்து ஒரு நீதிபதி தலைமையில் இரண்டு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்துவது பாராட்டிற்குரியது ஆகும். இப்படிக்கு ஹென்றி திபேன் நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்


கைதிகளின் அடிப்படை வசதிகளை சிறைகளில் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்படி சிறைத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் அடிப்படை வசதிகள் மதுரை மக்கள் கண்காணிப்பகம் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபென், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சிறைகளில் அலுவல் சாரா பார்வையாளர்களாக உரிய பயிற்சி பெற்றவர்களை நியமிக்கவும், சிறைகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.அப்போது அரசு வக்கீல்கள் எஸ்.பி.மகாராஜன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி, பெரும்பாலான சிறைகளில் விதிகளின்படி உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அலுவல்சாரா பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். மீதம் உள்ள சிறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றனர். .............................................

அலுவல் சாரா பார்வையாளர் நியமன வழக்கு - சிறை விதிகளில் திருத்தம் வேண்டும் - பரிந்துரைகளை வெப்சைட்டில் வெளியிட உத்தரவு.

The handbook should contain information on prisoners’ rights, laws protecting them and grievance redressal mechanisms available to them. MADURAI: The Madurai Bench of the Madras High Court on Monday directed the state to amend its prison rules in...

Prison administration needs to be reformed for creating a better environment and prison culture to ensure prisoners enjoy their right to dignified life under Article 21 of the Constitution, observed the Madurai Bench of the Madras High Court...

MADURAI: Prisoners deserve a dignified life and they must enjoy their rights during incarceration, said Madras high court, underscoring the need to improve prison culture and environment in Tamil Nadu. To achieve the twin goals, a division bench...


CHENNAI: Even as the Director General of Police (DGP) Dr C Sylendra Babu issued standard operating procedures (SOPs) on how to handle a suspect in police custody, reports of alleged police brutality and custodial deaths continued to rock the...