Media
அஜித்குமார் அடித்துக் கொலை.. நடந்தது என்ன? நீதிபதிகள் காட்டம்! உடற்கூராய்வு பேரதிர்ச்சி! Ajit Kumar Custodial Death Report: மடப்புறம் கோவில் காவலாளி உயிரிழந்தது தொடர்பான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயம் உள்ளது. சிசிடிவி காட்சிகள் காணாமல் போனது, விசாரணை முறையின் பின்விளைவுகள் குறித்து நீதிபதிகள் கடுமையாக கேள்விகள் எழுப்பியுள்ளன. மதுரை உயர்நீதிமன்றம் உடனடியாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது. ............................................. மடப்புறம் கோவில் காவலாளி உயிரிழந்தது தொடர்பான பொதுந வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிடையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் மரியா கிளீட் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது உடற்கூராய்வு தொடங்குவதற்கு முன்பு அஜித்குமாரின் உடலை முழுமையாக பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரரை அனுமதிக்கவில்லை என்று வழக்கறிஞர் ஹென்றி திபேன் தெரிவித்தார். நகை திருட்டு தொடர்பாக புகார் கொடுத்த நிகிதா என்பவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்றும், அதனால் தான் முறையாக விசாரணை நடத்தாமல் இளைஞர் தாக்கப்பட்டதாகவும் ஹென்றி திபேன் வாதிட்டார். ...........................................................
இளைஞர் அஜித்குமார் மரணம் | “தண்ணீர் கூட கொடுக்காமல் சித்ரவதை” - ஹென்றி திஃபேன் பரபரப்புப் பேட்டி சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ஹென்றி திஃபேன் செய்தியாளர்களைச் சந்தித்தார். Published on: 01 Jul 2025, 6:45 pm சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஹென்றி தீஃபேன், “எஃப்ஐஆர் இல்லாமலேயே விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் கூட கொடுக்காமல் மிளகாய் பொடு போட்டு சித்திரவதை செய்திருக்கின்றனர். சிசிடிவி காட்சிகளை அழிக்க முயற்சித்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
அஜித் குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது" - திருமாவளவன் அஜித்குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருப்பது குறித்துப் பேசியிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீஸார் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் மரணமடைந்த சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட மாநில அரசு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தனிப்படைக் காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அஜித்குமாரின் தம்பிக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையும், குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவும் வழங்கப்பட்டிருக்கிறது. ..................................................
Custody Death: 30 sec வீடியோ; சரண்டர் ஆன அரசு தரப்பு; நீதிமன்றத்தில் என்ன நடந்தது? - ஹென்றி திபேன் அந்த வீடியோவை எடுத்த சக்தீஸ்வரனையும் நீதிமன்றத்துக்கு சாட்சியாக அழைத்து வந்தோம். அவரும் அந்த கோவிலில்தான் பணியாற்றுகிறார். அஜித் குமாரின் தூரத்து சொந்தக்காரர் அவர். அந்த வீடியோவை எடுக்கும்போதே பதைபதைப்புடனும் அச்சதோடும்தான் எடுத்திருக்கிறார்." - ஹென்றி திபேன். .................................................................
