People's Watch in Media

Aruna commission records statements of 813 witnesses

பண்பாட்டு மாற்றம் தேவை - சித்திரவதை நிலவுவதை ஏற்க இயலாது - கனிமொழி காட்டம்

Eminent lawyers, journalists and human rights defenders on Monday evening paid tributes to Jesuit priest and activist Stan Swamy, who had once told his colleagues that if "working for the tribals, the marginalised was a crime," he was ready...

Judges direct that interim report of NHRC & judicial commission be submitted “It is somewhat alarming that the State through its police fired at unarmed protesters and no one is booked some three years after the incident,” the...


Three years after police allegedly gunned down 13 unarmed anti-Sterlite protesters in Tuticorin, the Madras high court on Friday chastised the state for not booking anyone in the matter. “Can we kill people and throw money at them...

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித ஆயுதமும் இல்லாமல் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களைச் சுட்டுக் கொன்றது நாகரிகமான சமுதாயமா என்றும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்புடையதா என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ........... மதுரையைச் சேர்ந்த பீபில்ஸ் வாட்ச்(peoples watch) என்ற அமைப்பின் நிறுவனர் ஹென்றி திஃபேன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நபர்கள் பலியாகினர். இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தது. தொடர்ந்து இந்த கொடூர சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசிற்குத் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியது. .............

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைப் போல இனியொரு சம்பவம் நடைபெறக் கூடாது என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தலைமை நீதிபதி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் அளித்திருந்த மனுவில், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தமிழக முதன்மை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் தேசிய உரிமை ஆணையம் வழக்கை முடித்து வைத்தது. ............... தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கையையும் முதன்மை செயலாளர் அறிக்கையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் இது குறித்து இருதரப்பும் பதிலளிக்க ஆணையிட்டனர். மேலும், வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், ஐகோர்ட் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 நபர்கள் உயிரிழந்தனர். தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தது. இதுகுறித்து, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு இச்சம்பவம் குறித்து நேரடியாக தூத்துக்குடி சென்று விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கையை, தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்தது. ............ மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் அறிக்கை இரண்டையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்றம் செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The Madras High Court on Friday directed the National Human Rights Commission (NHRC) to submit a copy of its investigation report into the police firing that took place in Thoothukudi in 2018 during the anti-Sterlite protests. ...