for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

13 Dec 2021 மலைவாழ் பழங்குடியின கூலித்தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் People's Watch in Media Dharmapuri

மலைவாழ் பழங்குடியின கூலித்தொழிலாளர்களை செம்மரம் வெட்ட அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் 

#RedSandal, #Tribals, #CustodialDeath, #PoliceAtrocity, #Labourers, #LabourersKilled, #Dinakaran
13 Dec 2021 ஆந்திர வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட தொழிலாளிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் - மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர் தமிழக அரசுக்கு  கோரிக்கை People's Watch in Media Dharmapuri

ஆந்திர வனத்துறையினரால் கொலை செய்யப்பட்ட தொழிலாளிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் - மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர் தமிழக அரசுக்கு  கோரிக்கை

#DailyThanthi, #RedSandal, #Tribal, #Torture, #HenriTiphagne, #PressMeet, #Dharmapuri
13 Dec 2021 ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்ட செல்வதை தடுக்க வேண்டும்’ People's Watch in Media Dharmapuri

ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்ட செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிா்வாக இயக்குநா் ஹென்றி டிபேன் வலியுறுத்தினாா். இதுகுறித்துத் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தருமபுரி மாவட்டம், சித்தேரியில் உள்ள மலைவாழ் பழங்குடி மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் இடைத்தரகா்களின் ஆசை வாா்த்தையை நம்பியும், ஏமாற்றப்பட்டும் ஆந்திர மாநிலத்துக்கு செம்மரங்கள் வெட்ட செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆந்திர வனத் துறையால் கொல்லப்பட்டனா். இதுகுறித்துத் தருமபுரி மாவட்ட காவல்துறை, மாவட்ட நிா்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலவச சட்ட மையமும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளாது ஏன் என தெரியவில்லை. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இருளா் இன மக்களின் துயரத்தை அறிந்து அவா்களுக்குத் தேவையான நலத் திட்ட உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறாா். அதேபோல் தருமபுரி மாவட்டம், சித்தேரியில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதர மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுத்து செம்மரம் வெட்டுவதற்கு செல்லும் நிலையைத் தடுக்க வேண்டும். அண்மையில் சித்தேரியைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தது தொடா்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஆந்திர மாநில சிறையில் உள்ளவா்களை, ஜாமினில் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

#Dinamani, #HenriTiphagne, #Tribal, #AP, #RedSandal, #APForest, #Dharmapuri, #LabourersKilling
13 Dec 2021 ஆந்திர வனத்துறையினரால் கொலைசெய்யபட்ட கூலித்தொழிலாளிகளின் குடும்பத்திற்கு இழப்பீடுதொகை வழங்கவேண்டும்! People's Watch in Media Dharmapuri

ஆந்திர வனத்துறையினரால் திட்டமிட்டு கொலை செய்யபட்ட கூலித்தொழிலாளிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.மேலும் ஆந்திரா வனத்துறை மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை! Video Courtesy: Samayam Tamil To watch full video: https://youtu.be/5oKZoTSfp5s

#SamayamTamil, #RedSandal, #Tribal, #CustodialDeath, #PoliceAtrocity, #Labourers, #LaboursKilled, #Dharmapuri, #AP, #APForest
13 Dec 2021 Fact Finding Team’s Report on Custodial Death of TN Labourers in AP People's Watch in Media Dharmapuri

Two Tamil Nadu Labourers killed in the custody of Andhra Pradesh forest officials. The joint conspiracy of Andhra Pradesh forest officials and police distract the case. Why is the Tamil Nadu Government keeping silent? The findings and recommendations...

#RedSandal, #FactFinding, #APForest, #Labourers, #LabourersKilling, #ForestOfficials, #AP, #PressMeet, #HenriTiphagne, #FactFindingReport
13 Dec 2021 Middlemen luring Sitheri tribals to cut red sanders in AP, says activist People's Watch in Media Dharmapuri

Middlemen luring Sitheri tribals to cut red sanders in AP, says activist fact finding team led by Henri Tiphagne from People’s Watch, an NGO, observed that tribals of Sitheri hamlet in Dharmapuri were exploited by middle men, who engage...

#DTNext, #RedSandal, #Dharmapuri, #FactFinding, #FactFindingReport, #APForest, #AP, #PoliceTorture, #Torture, #HenriTiphagne, #PeoplesWatch
13 Dec 2021 ஆந்திராவில் இரு தமிழர்கள் மர்ம மரணம் - நிவாரணம் வழங்க வலியுறுத்தல் People's Watch in Media Dharmapuri

ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கூடிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளதாக மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். தருமபுரி: தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்த, இடைத்தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர். இதில் ஒருவரது உடல் சித்தேரி மலைப் பகுதியில் வீசப்பட்டுக் கிடந்தது. மற்றொருவர் ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாத சடலமாக அடக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவினர் ஆந்திராவிற்கு சென்று விசாரணை செய்து அறிக்கையைத் தயார் செய்துள்ளனர். இதுதொடர்பாக மக்கள் கண்காணிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “ஆந்திர மாநிலத்தில் வனத்துறையினரால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட ராமன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் தருமபுரி மாவட்டம் சித்தேரியை சார்ந்தவர்கள். முதலமைச்சர் உதவி பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, காவல்துறை சித்திரவதையை, ஜெய்பீம் படத்தின் மூலம் அறிந்து இருளர் இன மக்களுக்குப் பல உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் செய்துள்ளார். இந்த செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், மலைவாழ் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதை முதலமைச்சருக்குத் தெரியப்படுத்த விரும்புகிறேன். ......................................

#ETV, ##EtvBharath, #AP, #Forest, #Dharmapuri, #FactFinding, #FactFindingReport, #HenriTiphagne, #APForest, #Labourers, #LabourersKilled
13 Dec 2021 செம்மரம் வெட்ட செல்வோரை தடுக்க : அரசுக்கு மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகோள் : People's Watch in Media Dharmapuri

இதுதொடர்பாக தருமபுரியில் அவர் கூறியதாவது: தருமபுரி மாவட்டம் சித்தேரியில் உள்ள எஸ்டி மலைவாழ் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லை. இதனால், இடைத்தரகர்களின் ஆசை வார்த்தையை நம்பியும், ஏமாற்றப்பட்டும், ஆந்திர மாநிலத்துக்கு செம்மரங்கள் வெட்ட செல்லும் நிலை உள்ளது. ஏற்கெனவே கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியை சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில வனத்துறையால் கொல்லப்பட்டனர். தற்போது, இதே போன்ற நிகழ்வில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக தருமபுரி ஆட்சியர் மற்றும் எஸ்பி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலவச சட்ட மையமும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை. சித்தேரியில் உள்ள மலைக் கிராம மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.செம்மரக்கட்டைகளை வெட்ட செல்லும் நிலையை தடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் உள்ளவர்களை கொலை செய்த, ஆந்திர வனத்துறையினர் மீது வழக்கு தொடுப்பதுடன், ஆந்திரா சிறையில் உள்ளவர்களை, விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

#TamilHindu, #HinduTamil, #APForest, #AP, #HenriTiphagne, #FactFinding, #FactFindingReport, #Labourers, #LabourersKilling
12 Dec 2021 ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழக பழங்குடியின தொழிலாளர்கள் People's Watch in Media Dharmapuri

தருமபுரி, டிச.12- ஆந்திராவில் தமிழக பழங்குடியின தொழிலாளர்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் தலையிட்டு உரிய விசாரணை உறுதி செய்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என மக்கள் கண்காணிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.  தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைப்  பகுதியைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்த, இடைத்தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம்  இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதில் ஒருவரது உடல் சித்தேரி மலைப்பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. மேலும்  மற்றொருவர் ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாதவாறு அடக்கம் செய்யப்பட்டார்.   இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவினர் ஆந்திரப் பகுதிக்கு சென்று  உண்மையை அறிந்து அறிக்கையை தயார் செய்துள்ளனர். இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு தருமபுரியில் முத்து இல்லத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் கண்காணிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் தருமபுரி மாவட்ட சித்தேரியை சார்ந்த  ராமன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் திட்டமிட்டு  கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் இவர்களின் மனைவி, குழந்தை மற்றும் குடும்பத்தினர் ஆதரவில்லாமல் நிர்க்கதியாக நிற்கிறார்கள்.  தமிழ்நாடு முதலமைச்சர் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, காவல்துறை சித்திரவதையை, ஜெய்பீம் படத்தின் மூலம் அறிந்து கண்ணீர் சிந்தி இருளர் இன மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். இந்த செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், மலைவாழ் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் என்பதை  முதல்வருக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.  மேலும், தருமபுரி, சேலம், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடி இன மக்களாக இருந்தாலும், வேறு சமூகமாக இருந்தாலும் தங்களது கிராமங்களை விட்டு பிழைப்பிற்காக வெளியூர் செல்லும் நிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த ராமன், பாலகிருஷ்ணன் ஆகிய இரு குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக்கூடிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் வாழக்கூடிய மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்த அரசுக்கு உண்டு.  இந்த அப்பாவி மலைவாழ் பழங்குடியின மக்களை ஆசை வார்த்தைகளை கூறி, இடைத்தரகர்கள் இந்த தொழி லுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இந்த  இடைத்தரகர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இடைத்தரகர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள், ஆந்திர மாநிலத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இருவர் சடலமாக மர்மமான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இவர்களின் இறப்பிற்கு உரிய காரணத்தை காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.  தமிழக காவல்துறையில் எத்தனையோ உளவு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்த இடைத்தரகர்களை கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு மெத்தனம் என தெரியவில்லை. மேலும், இந்த சித்தேரி உள்ளிட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் இந்த தொழிலுக்கு செல்வதை நிரந்தரமாக தடுப்பதற்கு உடனடியாக மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, அந்த மலை பகுதியிலே தொழில் மற்றும் வேலைவாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். கடப்பா சிறையில் இருப்பவர்களை, இலவச சட்ட பணிகள் குழுவினர் முன்வந்து, பிணையில் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஹென்றி கிபேன் தெரிவித்தார்.  இந்த சந்திப்பின் மக்கள் கண்காணிப்பகம் மாவட்ட அமைப்பாளர்‌ கே.பி.செந்தில்ராஜா மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனிருந்தனர்.

#RedSandal, #APForest, #Theekkathir, #HenriTiphagne, #PressMeet, #Labourers, #LabourersKilled, #PoliceTorture
12 Dec 2021 ஆந்திராவில் இரு தமிழர்கள் மர்ம மரணம்-கள ஆய்வறிக்கை வெளியிட்டு வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேட்டி People's Watch in Media Dharmapuri

ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கூடிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உள்ளதாக மக்கள் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். Courtesy: ETV பாரத் தமிழ்நாடு To Watch Video: https://youtu.be/MFdT2mPfiWs  

#ETV, #RedSandal, #APRedSandal, #APForest, #Tribal, #Labourers, #LabourersKilled


Join us for our cause