People's Watch in Media
ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 11 மணியளவில், வி விக்னேஷ் (வயது 23) மற்றும் அவரது நண்பர்களும் (ஆட்டோ ஓட்டுநர் பிரபு மற்றும் சுரேஷ்) சென்னை நகரின் கெல்லிஸ் பகுதிக்கு அருகே போதைப்பொருள் (கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி) வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் கழித்து சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் 23 வயது இளைஞன் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் வெளியானது. ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்த வழக்கில் அமைதியாக இருக்க காவல்துறை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் வழங்கியதாக அவரது சகோதரர் கூறுகிறார். இதை தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விக்னேஷின் மூத்த சகோதரர் வினோத், “கைது செய்த நாளன்று இரவு 11.30 மணிக்கு, விக்னேஷின் முதலாளி ரஞ்சித் உள்ளிட்ட 5 பேர் கெல்லீஸ் சிக்னலுக்கு வந்து விக்னேஷ் தன்னிடம் பணி செய்வதை உறுதி செய்தும் காவலர்கள் தாக்குதலைத் தொடர்ந்தார்கள். காயமடைந்த சுரேஷை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரிமாண்ட் உத்தரவு பெற்று புழல் சிறையில் அடைத்துள்ளனர். அதன்பிறகு என்னை பட்டினம்பாக்கம் காவல் ஆய்வாளர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். ஆயிரம் விளக்கு காவல் ஆய்வாளர் எங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வழங்கினார். 29ஆம் தேதி காவலர்களால் கொடுக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க சென்னை பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் மனு தாக்கல் செய்தோம். சம்மன் அனுப்பி வாக்குமூலம் பெற்ற பின் பணத்தை பெறுவதாக நீதிபதி கூறியுள்ளார்.” என்று கூறுகிறார். விக்னேஷ் உடலில் காயங்கள் இருப்பதாகவும் வினோத் குற்றம் சாட்டினார். “பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலைப் பார்க்க நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. எங்கள் வீட்டு உரிமையாளரிடம் போலீசார் பேசி எங்களை வீட்டை காலி செய்யவைக்குமாறு மிரட்டினர்,” என்று வினோத் கூறினார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, “சந்தேகத்திற்கிடமான மரணம்” என்று வழக்குப் பதிவு செய்த போலீஸார், உதவி ஆய்வாளர் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “லாக்அப் டெத்தில் ஈடுபட்ட காவலாளிகளை பணிநீக்கம் அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களை கைது செய்யவேண்டும்”, என்று வழக்கறிஞர் ஹென்றி தீபன் கூறுகிறார். இந்த வழக்கு விசாரணை குற்றப்பிரிவு சிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கின் விசாரணை முழுமையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்று உறுதியளித்தார். விக்னேஷுடன் கைது செய்யப்பட்ட சுரேஷின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றும் அவர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
Chennai: While the custodial death of V Vignesh is being investigated by a judicial magistrate and the CB-CID separately, the forum for Joint Action Against Custodial Torture-Tamil Nadu, made the brothers of the deceased, and the auto driver, narrate the...
சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், மனித உரிமைகள் ஆர்வலர்கள் சுதாராமலிங்கம், பி.எஸ்.அஜிதா, ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும். விக்னேஷ் இறுதிச் சடங்குக்காக போலீஸார் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் எதற்காக பணம் தரவேண்டும்? அரசும் ஏன் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அந்த ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி யார் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து, இனியும் காவல் நிலைய மரணங்கள் நடக்காமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விக்னேஷின் சகோதரர்களுக்கு ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.
Vignesh, 22, of Pattinapakkam, chennai, died unexpectedly while being questioned at the police station. In this context, People's watch Director Henry Thieben, human rights activists Sudharamalingam, BS Ajitha, and Jimraj Milton told reporters in chennai yesterday on behalf of...
After nearly 10 days of Vignesh's alleged custodial death, the key eyewitness in the case and the deceased's family gave details about the case and demanded justice. The deceased's counsel too raised a few questions and demanded...
A joint action committee against custodial torture comprising advocates and social workers on Saturday released a fact-finding report on the custodial of death of Vignesh, 25, in a city police station recently and said that it was a clear...
காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வாக்குமூலங்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த விக்னேஷ் என்ற இளைஞரின் லாக்அப் மரணம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களைக் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சென்னையில் இன்று வெளியிட்டது. வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், ஹென்றி திபேன், அஜிதா, மில்டன் ஆகியோர் விக்னேஷின் உடன்பிறந்த சகோதரர்கள், சம்பவ சாட்சிகளுடன் வாக்குமூலங்களை வெளியிட்டனர்.
விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழப்புக்கு யார் காரணம்? ஹென்றி திபேன்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஹென்றி திபேன் வேண்டுகோள் | Vignesh Custodial Death | சென்னை விக்னேஷ்
லாக்கப் மரணத்தை உயரதிகாரிகள் மறைத்து இருக்கின்றனர் - ஹென்றி திபேன் | Zee Tamil News