for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

13 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜன நாயகத்தின் மீது விழுந்த வடு People's Watch in Media Chennai

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்  ஜன நாயகத்தின் மீது விழுந்த வடு

#ETVBharat, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
13 Sep 2021 Sterlite Protests - 'State Must Be Seen To Be With The Families, Not An Adversary': Madras HC Orders State To Provide Compensation, Assistance To Victims and Their Kin People's Watch in Media Chennai

  The Madras High Court on Monday issued a host of directions to the State government for the rehabilitation of the victims and their families of the 2018 incident of police firing that had followed the Sterlite Protests...

#LiveLaw, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
13 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு: நீதிமன்றம்! People's Watch in Media Chennai

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த  கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்  நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்று சென்னை உயர்...

#Metropole.in, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
13 Sep 2021 Thoothukudi Sterlite firing of 2018 a scar on democracy, we should never forget: Madras High Court People's Watch in Media Chennai

Without meaning disrespect, yes, the protest may not have been legal or legitimate, but citizens cannot be fired on the behalf of any corporate body," the Chief Justice added. The 2018 police firing on unarmed civilians...

##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #Sterlite, #NHRC, #Corporate, #BarandBench
13 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் அரசை கண்டித்த உயர் நீதிமன்றம் People's Watch in Media Chennai

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு எதிராக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதமும் பலியானோரின் புகைப்படங்களும்வெளியாகி நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. `இப்படியொரு துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?'...

##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate, #BBCTamil
13 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு ! People's Watch in Media Chennai

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 மே 22 ஆம் தேதி அப்பகுதி மக்கள் போராட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் வரையில் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரித்து வழக்கினை முடித்துவைத்திருந்த நிலையில் அதற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரணை நடத்தக்கோரி மனுவில் குறிப்பிடப்பட்டு இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன்பாக விசாரணையில் நீதிபதிகள், ‘கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக அரசுத் துறைகள் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு’ என்று குறிப்பிட்டதுடன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கூடுதல் உதவி செய்ய பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனித உரிமைகள் ஆணையம் விசாரணை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து அறிக்கையின் நகலை மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கக்கோரி அதற்கு அரசு பதிலளிக்கக்கோரி வழக்கு ஆறு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate, #CCTamilnews
13 Sep 2021 கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு -சென்னை ஐகோர்ட் People's Watch in Media Chennai

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் எனக்கோரி போராடிய மக்கள் கடந்த 2018-ம் ஆண்டு துப்பாக்கிச்சூடு நடந்திருந்தது. இது தொடர்பாக விசாரித்த மனித உரிமை ஆணையம், வழக்கை முடித்துவைத்திருந்தது. அதை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் 'விசாரணையை மனித உரிமை ஆணையம் மீண்டும் தொடங்க வேண்டும். முறையாக விசாரணை நடக்கிறதா என்பதை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.  இந்தநிலையில், இந்த வழக்கு இன்று சென்னை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமை ஆணையம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.  அந்த அறிக்கையை மத்திய அரசு, மாநில அரசு மற்றும் மனுதாரருக்கு நகலாய்வு வழங்கவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நகலாய்வை இணைய வழியில் பரப்பக்கூடாது என்றும் அவர்கள் அறிவுரை தெரிவித்தனர். தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்தபோது, 'பலியானவர்களின் குடும்பங்களுக்கும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவதற்கு தமிழக அரசு பரீசிலிக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனத்திற்காக இப்படியான துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளை அரசு துறைகள் நடத்தக்கூடாது.  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' என்றனர். பின்னர் இவ்வழக்கை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate, #DailyThanthi
13 Sep 2021 கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதா: உயர் நீதிமன்றம் காட்டம்! People's Watch in Media Chennai

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கி காட்ட கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது ஹைலைட்ஸ்: கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கியை காட்ட கூடாது கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக...

#Samayam, #TamilSamayam, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
13 Sep 2021 கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது!: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஐகோர்ட் கருத்து..!! People's Watch in Media Chennai

சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்துவைத்தது. இதனை எதிர்த்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமை ஆணையம் சீல் வைத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அவை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக மனுதாரர் திபேன் தெரிவித்தார். மேலும் அறிக்கை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் தூத்துக்குடி  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என குறிப்பிட்ட நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது எனவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என்றும் குறிப்பிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையையும், புலன் விசாரணை பிரிவின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றனர்.

#Dinakaran, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate
13 Sep 2021 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு சென்னை உயர்நீதிமன்றம் People's Watch in Media Chennai

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஜனநாயகத்தின் மீது  விழுந்த வடு சென்னை உயர்நீதிமன்றம் 

#Dinamani, ##ThoothukudiPoliceFiring, #ChiefJustice, #HighCourtOrder, #Sterlite, #NHRC, #Corporate


Join us for our cause