for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

16 Nov 2021 புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவு! People's Watch in Media Madurai

மதுரை: உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மூவரும் அக்டோபர் 19ஆம் தேதி படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி அவர்களது ரோந்து கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதில் சுகந்தன் மற்றும் சேவியரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து மீனவர் ராஜ்கிரணின் உடலை சர்வதேச எல்லையில் இலங்கை கடற்படை இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ராஜ்கிரணின் உடலை எனக்கும், எனது உறவினர்கள் யாருக்கும் முழுவதும் திறந்து காட்டாமல் அடக்கம் செய்து விட்டனர். எனவே, ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. போட்டோவில் அவர் முகத்தில், உடலில் காயங்கள் இருந்தன. இது குறித்து தமிழ்நாடு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ராஜ்கிரண் உடலை மறு உடற்கூராய்வு செய்து எவ்வாறு உயிரிழந்தார் எனக் கண்டறிய வேண்டும். உயர் காவல் அலுவலர் கொண்டு விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று (நவ.16) நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "நவம்பர் 18ஆம் தேதி தாசில்தார், மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலை மீண்டும் எடுத்து மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவர்கள் சரவணன், செல்வகுமார் குழுவினர் உடற்கூராய்வு செய்ய வேண்டும். மனுதாரர் தரப்பில் ஓய்வு பெற்ற தடயவியல் அலுவலர் சேவியர் செல்வ சுரேஷ் மறு உடற்கூராய்வின் போது உடனிருப்பார். மீனவர் ராஜ்கிரண் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்தாரா அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் மறு உடற்கூராய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

#media
16 Nov 2021 Re-postmortem of fisherman: TN govt’s response sought People's Watch in Media Madurai

The petitioner R Brunda, wife of the deceased fisherman Rajkiran (28) of Kottaipattinam in Pudukkottai, alleged that her husband did not die due to drowning as claimed by the Sri Lankan authorities. MADURAI: The Madurai Bench of Madras High...

#media
16 Nov 2021 இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டிருந்தால் சும்மா விடக்கூடாது' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து! People's Watch in Media Madurai

புதுகோட்டை மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 118 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். 18ஆம் தேதி அதிகாலை மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், ஜோசப் ஆகியோர் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இவர்களின் படகு நோக்கி வேகமாக வந்த இலங்கை கடற்படை கப்பல், மீனவர்களின் படகில் மோதி மூழ்கடித்தது. படகிலிருந்த மீனவர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் சுகந்தன், ஜோசப் ஆகிய இரு மீனவர்களை மீட்டு கைது செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசன் துறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் இந்த சம்பவத்தில் ராஜ்கிரண் நிலை என்னவானது என்றே தெரியாமல் போக, அன்று மாலை ராஜ்கிரண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக முதலில் அறிவித்த இலங்கை அரசு, சிலமணி நேரத்தில் அந்த தகவலைத் திரும்பப் பெற்றதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதையடுத்து கடந்த 1.10.2021 அன்று  ராஜ்கிரணின் உடல் மீட்கப்பட்டதாகப் படங்கள் வெளியானது. இலங்கை கடற்படை கப்பலால் மோதி கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலையும், கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோட்டைப்பட்டினம் மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பல நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவர் ராஜ்கிரணின் உடல் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது. இந்தியக் கடலோர கடற்படையிடமிருந்து உடலைப் பெறக் கோட்டைப்பட்டினத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்கள், இரண்டு அதிகாரிகளுடன் சர்வதேச எல்லைக்குச் சென்ற இந்தியக் கடற்படை அதிகாரிகளிடம் மீனவர் ராஜ்கிரணின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

#media
16 Nov 2021 மீனவர் உடல் மறுபரிசோதனை உயர் நீதிமன்றம் உத்தரவு People's Watch in Media Pudukottai

  மதுரை:புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீனவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கோட்டைப்பட்டினம் பிருந்தா தாக்கல் செய்த மனு: என் கணவர் ராஜ்கிரண் அக்., 18ல் சிலருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார். படகு மீது இலங்கை கடற்படை மோதி சேதப்படுத்தியது. ராஜ்கிரண் கடலில் மூழ்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின் அவரது உடல் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.கணவரை இலங்கை கடற்படை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்; மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு: ராஜ்கிரண் உடலை நவ., 18ல் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி., மணமேல்குடி தாசில்தார் முன்னிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் தமிழ்மணி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.மனுதாரர் தரப்பில், ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர் சேவியர் செல்வ சுரேஷ் உடன் இருக்கலாம். அரசுத் தரப்பில் வரும் 24ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

#Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #MaduraiHighCourtOrder, ##HighCourtOrder, ##HighCourtDirection
15 Nov 2021 Sedition, Farm Laws, Electoral Bonds: Over 200 Eminent Citizens Urge CJI to Hear Key Matters People's Watch in Media New Delhi

A letter to the CJI stresses that some of these matters, pending for as long as two years, affect several people's lives and livelihoods acutely.   The Wire Staff...

#media
12 Nov 2021 Lawyers oppose proposed transfer of Madras HC CJ to Meghalaya People's Watch in Media Madurai

“The instant transfer would quell any such efforts to strengthen the judiciary in the State... We request that the collegium may reconsider, in public interest, its decision,” the representation, signed by over 200 lawyers, said Over 200 lawyers...

#media


Join us for our cause