
``தமிழகத்தில் உள்துறைச் செயலர் இல்லையா? உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இல்லையா? ஐ.பி.எஸ் அதிகாரிகளை அழைத்து அவர்கள் கடிந்திருக்க வேண்டாமா? இதனால்தான் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” - ஹென்றி திபேன்
.........................................................................
அஜித் குமார் லாக்கப் மரணத்துடன் தமிழக காவல்துறையில் 31 லாக்கப் டெத்! மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் பேட்டி
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த 6 காவலர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் மாட்டுத் தொழுவத்தில் நீதிபதி நேரில் ஆய்வு செய்துள்ளார்.
.....................................................
காவல்துறை தடயங்களை அழிக்க முயற்சி என்று குற்றச்சாட்டு
போலீஸ் அடிக்கும் வீடியோ எடுத்தது எப்படி?: வக்கீல் விளக்கம் | Ajithkumar Case சிவகங்கை, திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளை அமர்வு விசாரித்தது. அது தொடர்பான விவரங்களை வக்கீல் ஹென்றி திபேன் கூறினார்.
லாக்-அப் மரணம்: "அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரமா?" - அரசுக்கு ஜகோர்ட்டு சரமாரி கேள்வி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
..................................................................