`முதல்வரை ஏமாற்றுகிறார்கள்; உயரதிகாரிகள் லாபி செய்து..!’ - கொந்தளிக்கும் ஹென்றி திபேன்
``தமிழகத்தில் உள்துறைச் செயலர் இல்லையா? உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் இல்லையா? ஐ.பி.எஸ் அதிகாரிகளை அழைத்து அவர்கள் கடிந்திருக்க வேண்டாமா? இதனால்தான் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.” - ஹென்றி திபேன்
.........................................................................
``காவல்துறையின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகி வருகிறதே. அதனால் அரசுக்கும் கெட்டப் பெயர் உண்டாகிக் கொண்டிருக்கிறதே. ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளராக இதையெல்லாம் எப்படி பார்க்கிறீர்கள்?”
``இது இப்போதுள்ள பிரச்னை இல்லை. எல்லா ஆட்சியிலும் இந்த பிரச்னைகள் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது நாம் இந்த ஆட்சி குறித்து பேச வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. 2021 இல் இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக எதிர்க்கட்சியாக ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் சம்பவம் போன்றவற்றில் நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட்டிருந்தார்கள். அதனால் இவர்களின் ஆட்சி கொஞ்சம் வித்தியாசமாக இருக்குமென நம்பினோம்.
................................................................
