for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பதை பலரும் பாராட்டி வரும் நிலையில் மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காவல்துறையினர் சுட்டு கொலை செய்வதற்கு பதிலாக பிடித்துள்ளார்கள் என்று சொல்வதே நல்லது. ஆனால் அதற்கும் சட்டத்தில் இல்லை. ஏனென்றால் இது போன்று தொடர்ந்து காவல்துறையினர் செய்வதற்கு வாய்ப்பாக அமைய கூடாது என மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் கூறியுள்ளார்.

மேலும் ஆயுதங்களை பயன்படுத்தி எந்த ஒரு குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று சட்டத்தில் கூறவில்லை எனவும், மாறாக குற்றவாளிகள் அதிக பலத்துடன் இருக்கும் போது அதற்கு சமமான பலத்துடன் சென்று போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் காவல்துறை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது, சுட்டு பிடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் இது கண்டிக்கத்தக்க விஷயம் எனவும் அவர் கூறினார்.

Full Media Report



Join us for our cause