Media
சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (22) விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், மனித உரிமைகள் ஆர்வலர்கள் சுதாராமலிங்கம், பி.எஸ்.அஜிதா, ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும். விக்னேஷ் இறுதிச் சடங்குக்காக போலீஸார் ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் எதற்காக பணம் தரவேண்டும்? அரசும் ஏன் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அந்த ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி விசாரணை அதிகாரி யார் என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து, இனியும் காவல் நிலைய மரணங்கள் நடக்காமல் இருக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். விக்னேஷின் சகோதரர்களுக்கு ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும்.” இவ்வாறு அவர்கள் கூறினர்.
Vignesh, 22, of Pattinapakkam, chennai, died unexpectedly while being questioned at the police station. In this context, People's watch Director Henry Thieben, human rights activists Sudharamalingam, BS Ajitha, and Jimraj Milton told reporters in chennai yesterday on behalf of...
After nearly 10 days of Vignesh's alleged custodial death, the key eyewitness in the case and the deceased's family gave details about the case and demanded justice. The deceased's counsel too raised a few questions and demanded...
A joint action committee against custodial torture comprising advocates and social workers on Saturday released a fact-finding report on the custodial of death of Vignesh, 25, in a city police station recently and said that it was a clear...
காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வாக்குமூலங்கள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த விக்னேஷ் என்ற இளைஞரின் லாக்அப் மரணம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களைக் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சென்னையில் இன்று வெளியிட்டது. வழக்கறிஞர்கள் சுதா ராமலிங்கம், ஹென்றி திபேன், அஜிதா, மில்டன் ஆகியோர் விக்னேஷின் உடன்பிறந்த சகோதரர்கள், சம்பவ சாட்சிகளுடன் வாக்குமூலங்களை வெளியிட்டனர்.
Chennai Custodial Death-What happened to Vignesh-New evidence| Human Rights Activists|Henri Tiphagne Video Courtesy: RedPix
Vignesh Issue- Police Bargain Money - Vignesh's family shows Evidence?| Lockup Death| Henri Tiphagne Video Courtesy: S TV
காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் வலியுறுத்தல் ...
Chennai (Tamil Nadu) [India], April 30 (ANI): Almost a week after 25-year old V Vignesh allegedly died in police custody at a police station in Tamil Nadu's Chennai, his brother on Saturday accused the police of offering a bribe...
சென்னையில் போலீஸ் காவலில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், மத்தியக் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்த வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமென்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. இந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம் குறித்த பதற வைக்கும் வாக்குமூலங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, விக்னேஷின் உறவினர்கள், இந்த நிகழ்வோடு சம்பந்தப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலங்களை வெளியிட்டது. இதில் பல வாக்குமூலங்கள் பதறவைக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. எடுத்துக்காட்டாக, கெல்லீஸ் சிக்னல் அருகே ஆட்டோவை சோதித்த போலீசார் அதில் பயணித்த சுரேஷ் மற்றும் விக்னேஷை அங்கேயே சவுக்கு கட்டையால் அடித்ததாக ஒரு ஆட்டோ டிரைவர் அளித்த வாக்கு மூலம் சொல்கிறது. நடக்க முடியாத அளவுக்கு அடித்த பிறகும் அவருக்கு காவல் நிலையத்தில் சித்ரவதை தொடர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.