for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

3 Nov 2023 நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்? - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி People's Watch in Media

"மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை என்பவரை மட்டும் வழக்கில் சேர்த்துள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது. அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, அதன் அடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று குற்றம் சாட்டினார் ஹென்றி திபேன்.

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #Thoothukudi, #ThoothukudiFiring, #ThoothukudiViolence, #NHRC, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #தூத்துக்குடி, #தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, #தூத்துக்குடி வன்முறை, #தேசிய மனித உரிமை ஆணையம், #துப்பாக்கிச் சூடு
28 Sep 2023 தூத்துக்குடி சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு!! People's Watch in Media

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ஹென்றி திபேன் அளித்த புகாரைப் பற்றிய பதிவு இடம்பெறாதது ஏன் என்றும் புகார் அளித்த அவர் தரப்பு வாதத்தை கேட்காதது ஏன் எனவும்  கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,அது குறித்து மனித உரிமைகள் ஆணையம் விளக்கமளிப்பதற்காக வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

##HenriTiphagne, ##HenryTiphagne, ##PeoplesWatch, ##TUTFiring, ##ThoothukudiFiring, ##NHRCinFiringCase, ##NationalHumanRightsCommission, ##MadrasHighCourt, ##NHRC, ##JusticeNishaBanu, ##ஹென்றிதிபேன், ##ஹென்றிடிபேன், ##மக்கள்கண்காணிப்பகம், ##தூத்துக்குடிதுப்பாக்கிச்சூடு, ##தூத்துக்குடிகொடூரம், ##தேசியமனிதஉரிமைஆணையம்


Join us for our cause