People's Watch in Media

Mugilan went missing hours after a press meet in which he accused two senior police officers of playing an important role in the Thoothukudi open firing that took place on May 22. Over two weeks since the anti-Sterlite...

சூழலியலாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஆட்கொணர்வு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், ஆஜரான சிபிசிஐடி தரப்பு இந்த வழக்கில் இதுவரை 148 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும், மக்களிடம் துண்டறிக்கைகள் கொடுக்கப்பட்டு இவரைக் கண்டால் தகவல் தெரிவிக்கும்படி சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சென்னை எழும்பூர் ரயில்வே காவல்நிலையம் இன்னும் அத்தனை கேமிரா காட்சிகளையும் ஒப்படைக்காத நிலையில் முகிலன் விவகாரத்தில் சரிவர எந்த முடிவுக்கும் செல்லமுடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முகிலன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், சிபிசிஐடி விசாரணையும் சரிவர நடைபெறவில்லை என்றும் முகிலன் தொடர்பாக ஆசீர்வாதம் என்பவரிடம் விசாரிக்க வந்த சிபிசிஐடி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ``செயற்பாட்டாளர் ஹென்றி டிபெய்ன் பெயரில் டிபெய்ன் என்றால் என்ன, வழக்கறிஞர் ஏன் கட்டணமில்லாமல் இந்த வழக்கை நடத்துகிறார்?” என்பது போன்ற கேள்விகளைதான் கேட்கிறார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் உட்பட முழுவிவரத்துடன் வருகின்ற 18 மார்ச் 2019ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Prosecution says a record number of 148 witnesses were examined in five days The Madras High Court on Monday granted the Crime Branch-Criminal Investigation Department (CB-CID) time till March 18 to trace the anti-Sterlite activist T. Mugilan alias...


சென்னை: சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். சூழலியலாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு ஒன்றினை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

முகிலன் குறித்த வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு. சுற்று சூழல் பாதுகாப்பு இயக்க செயற்பாட்டாளர் முகிலன் மாயமானது தொடர்பான விசாரணை குறித்து மார்ச் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சி பி சி ஐ டி க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் கஸ்டடியில் முகிலன் இல்லை - ஹென்றி திபேன். காணாமல் போன சூழியியல் போராளி முகிலன் போலீஸ் கஸ்டடியில் இல்லை என்று மனித உரிமை போராளி ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

Chennai: The CB-CID has been entrusted with the investigation and tracing of a Tamil Nadu environmental activist Mugilan alias Shanmugham. Mugilan went missing on February 15 shortly after he claimed involvement of senior police officers in the police firing...


சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் காணாமல் போனது தொடர்பாக எழும்பூர் போலீஸார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரான ஹென்றி டிபேன் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில்,‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்தாண்டு மே 22-ம் தேதி போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் சென்னையில் வீடியோ வெளியிட்டார். இந்த ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த பிப்.15 அன்று சென்னையில் இருந்து நாகர்கோவில் ரயிலில் மதுரைக்குச் சென்ற அவர் திடீரென மாயமாகியுள்ளார். திண்டிவனம் அருகே ஒலக்கூர் ரயில் நிலையத்துக்குப்பிறகு அவரது செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.