மதுரை: கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்த வழக்கின் விசாரணையை 2 வாரத்தில் அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தென்காசி அச்சன்புதூரைச் சேர்ந்த கோபி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் 23.10.2017-ல் இசக்கிமுத்து, இவர் மனைவி சுப்புலெட்சுமி, மகள்கள் மதுஅரண்யா, அட்சயபரணி ஆகியோர் தீக்குளித்து இறந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு நெல்லை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.
வனத்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்து ஒரு வாரமாகப் போராடி வருகிறார்கள். அதனால் வனத்துறை .....
அணைக்கரை முத்துவின் மனைவி பாலம்மாள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி திபேன், `மாலை 4 மணிக்கு மேல் உடற்கூறு ஆய்வு செய்யக் கூடாது என்ற சட்ட விதிமுறைகளை மீறி.....
பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து விசாரணை. நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணி புரியும் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து மாநில அளவிலான பொது விசாரணை சென்னையில் நடந்தது