விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட வழக்கை மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்ற ஒப்புதல்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை, மாவட்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றும் மனு ஏற்கப்பட்டுள்ளது.
.....................................
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாடசாமி கூறும்போது, “இந்த விவகாரத்தில் மிகப் பெரிய மனித உரிமை மீறல் நடந்துள்ளது. எனவே இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இந்த வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறும் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.
