இது காவல்துறை சித்திரவதையால் நடந்திருக்கும் ஒரு கொலை சிறைத்துறையும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளது
அவர்கள் இந்தக் கொடும்பணியைத் தொடா்ச்சியாக செய்து வந்துள்ளனர். இவ்வாறு கொடூரத் தாக்குதலுக்கு பலியாகி இறந்தோரும், இன்னும் உயிருக்கு போராடுவோரும் உண்டு. ஆனால் இவை பற்றிப் பல முறையீடுகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலனுக்குச் சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவுதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் படுகொலை. மதுரை: சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு அனுப்பினால் நீதி கிடைக்க கால தாமதம் ஆகும் என்று, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தெரிவித்துள்ளது. சிபிசிஐடி விசாரணை தொடர வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் யாராவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், போலீஸாரிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால், போலீஸாரே புகாரில் சிக்கினால் யாரிடம் தெரிவிப்பது?. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே, தவறு செய்யும் போலீஸார் மீது புகார் அளிக்க தனி அமைப்பை (Police Complaints Authority) உருவாக்க வேண்டும் என கடந்த 2006-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
-------------------------------------------------------------------