for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

18 Nov 2021 Re-Postmortem of Pudukottai fisherman's body conducted People's Watch in Media Pudukottai

#media
18 Nov 2021 மீனவர் ராஜ்கிரண் உடல் தோண்டியெடுப்பு! People's Watch in Media Pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உயிரிழப்பில் மறு உடற்கூறாய்வு தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் சக மீனவர்களுடன் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட ஐந்து நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.     இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.   இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவினை அடுத்து மீனவர் ராஜ்கிரணின் உடல் மறு பிரேதப் பரிசோதனைக்காகத் தோண்டியெடுக்கப்படுகிறது.

##Fisherman, ##Kottaipattinam, ##Pudukottai, ##Rajkiran, ##Re-postmortem, ##HighCourtOrder, ##MaduraiHighCourt, ##HighCourtDirection, #SriLankanNavy, #Navy
18 Nov 2021 இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவர் உடலை தோண்டி எடுத்து மறு பரிசோதனை ஐகோர்ட்டு உத்தரவுப்படி நடந்தது People's Watch in Media Pudukottai

கோட்டைப்பட்டினம்: மீனவர் சாவு புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த மாதம் 18-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலால் மோதினர். இதில் படகு தண்ணீரில் மூழ்கியதில் மீனவர் ராஜ்கிரண் (வயது 30) உயிரிழந்தார். பின்னர் இலங்கையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரில்அடக்கம் செய்யப்பட்டது.  ஐகோர்ட்டு உத்தரவு  இந்நிலையில் இறந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா, தன்னுடைய கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், ராஜ்கிரணை அடக்கம் செய்யும் போது, அவரது உடலை முழுமையாக பார்க்க அனுமதிக்கவில்லை. ராஜ்கிரண் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை, அவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்று இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜ்கிரணின் உடலை மணமேல்குடி தாசில்தார் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். மேலும் ராஜ்கிரண் சுடப்பட்டு இறந்தாரா? அல்லது கடலில் மூழ்கி இறந்தாரா? என்பதை தெளிவுபடுத்தும் வகையில் மீனவர் உடல் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.  உடல் தோண்டி எடுப்பு  இதனைத்தொடர்ந்து கோட்டைப்பட்டினத்தில் நேற்று மீனவர் ராஜ்கிரணின் உடலை தோண்டி எடுக்கும் பணியை வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டனர். ஓய்வு பெற்ற தடயவியல் துறை பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தமிழ்மணி, சரவணன், மணமேல்குடி தாசில்தார் ராஜா, கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன், மனுதாரர் தரப்பில் ராஜ்குமார் மனைவி பிருந்தா, மீனவர் காப்போம் அமைப்பின் மாநிலச் செயலாளர் தர்மதுரை, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.  மீண்டும் பிரேத பரிசோதனை  பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட உடல் ராஜ்கிரணின் உடல்தான் என்று உறுதிபடுத்த ராஜ்கிரணின் மனைவி பிருந்தாவை அடையாளம் காட்டச் சொன்னார்கள். ராஜ்கிரணின் மனைவி பிருந்தா, எனது கணவரின் 2 கைகளிலும் பச்சை குத்தி இருக்கும் என்று கூறினார். பின்னர் அவர் உறவினர் ஒருவர் அருகே வந்து 2 கைகளையும் பார்த்தார். 2 கைகளிலுமே பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து தோண்டி எடுக்கப்பட்ட உடல் ராஜ்கிரணின் உடல்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து உடல் ஆம்புலன்ஸ் மூலம் மறு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் ராஜ்கிரண் உடல் மீண்டும் கோட்டைப்பட்டினம் கொண்டுவரப்பட்டு அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பெற்றோர் வரவில்லை ராஜ்கிரணின் உடலை தோண்டி எடுத்தபோது, அவரது பெற்றோர் தரப்பில் யாரும் வரவில்லை. ராஜ்கிரணின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்வதில் ராஜ்கிரணின் பெற்றோர்களுக்கு உடன்பாடு கிடையாது என்று கூறப்படுகிறது. இதனால் உடல் தோண்டி எடுக்கும் இடத்திற்கு ராஜ்கிரண் பெற்றோர்களோ அல்லது ராஜ்கிரண் உறவினர்களோ யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#media
17 Nov 2021 Re-postmortem ordered on fisher's body allegedly killed by Lankan Navy People's Watch in Media Madurai

MADURAI: The Madurai Bench of Madras High Court on Tuesday ordered re-postmortem on the body of Rajkiran (28), a fisherman from Pudukkottai, who died last month after his boat was allegedly hit by a Sri Lankan vessel. Hearing a...

#NewIndianExpress, #NIE, #SriLankanNavy, #PostMortem, #Re-postmortem, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection
17 Nov 2021 HC orders fresh autopsy of fisherman who died at sea People's Watch in Media Madurai

  His boat collided with a Sri Lankan naval vessel The Madurai Bench of the Madras High Court has ordered a re-postmortem be conducted on the body of a Pudukkottai fisherman who died after falling into the...

##TheHindu, #SriLankanNavy, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #Re-postmortem, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection
17 Nov 2021 High Court orders re-post mortem of TN fisherman allegedly killed in SL Navy People's Watch in Media Madurai

The Madurai bench of the Madras High Court on Tuesday ordered a re-postmortem on Kottaipattinam fisherman R Raj Kiran, who was allegedly gunned down by the Sri Lankan Navy in October this year Madurai: A petition filed by R...

#media
17 Nov 2021 Madras HC: Exhume body of fisherman, hold re-postmortem People's Watch in Media Madurai

MADURAI: The Madras high court on Tuesday directed a team of experts to exhume and conduct a re-postmortem on the body of the Pudukottai fisherman on November 18, after taking into account the apprehension raised by his wife...

#TimesofIndia, #TOI, #SriLankanNavy, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #Re-postmortem, #HighCourtOrder, #HighCourtDirection
17 Nov 2021 மரணத்தில் சந்தேகம்.. மீனவர் ராஜ்கிரண் உடலை மறு கூராய்வு செய்ய கோர்ட் உத்தரவு..! People's Watch in Media Madurai

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் இடித்ததால் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3 பேரும் படகில் நடுக்கடலில் அக்டோபர் 19-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரையும் இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார். இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை சர்வதேச எல்லையில், இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. என்னிடமும், உறவினர்களிடமும் பெட்டியில் இருந்த உடலை முழுவதும் திறந்து காட்டாமல் அடக்கம் செய்து விட்டனர். எனவே, ராஜ்கிரண், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. போட்டோவில் அவர் முகத்தில் உடலில் காயங்கள் இருந்தது. எனவே, இது குறித்து தமிழக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ராஜ்கிரணின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து எவ்வாறு இறந்தார் என்பதைக் கண்டறிய வேண்டும். உயர் காவல் அதிகாரிகள் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தெரிவிக்கையில், ‘மீனவர் ராஜ்கிரண் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அதனை எளிதாக விட்டுவிட இயலாது. உயிரிழந்த மீனவர் மனைவியின் சந்தேகங்களை தீர்ப்பது அரசின் கடமை. இறந்தவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்வதில் என்ன பிரச்சனை..? தாசில்தார் முன்னிலையில், காவல்துறை பாதுகாப்புடன் நவம்பர் 18-ம் தேதி மீனவரின் உடலை தோண்டி எடுத்து கோட்டைப்பட்டினம் பகுதிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தடய அறிவியல் துறை மருத்துவர் தமிழ்மணி மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சரவணன் ஆகியோர் மீனவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்யவும். அதன் அறிக்கையை நவம்பர் 24-ம் தேதி தாக்கல் செய்யவும். உடற்கூராய்வின் போது, மனுதாரர் தரப்பில் ஓய்வுபெற்ற தடய அறிவியல் துறை பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ் உடனிருக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

#SriLankanNavy, #Navy, #Fisherman, #Kottaipattinam, #Pudukottai, #Rajkiran, #Re-postmortem, #HighCourtOrder, #MaduraiHighCourt, #HighCourtDirection


Join us for our cause