for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

22 Jul 2022 சாத்தன்குளம் வழக்கின் விசாரணை தள்ளி வைப்பு People's Watch in Media Madurai

சாத்தன்குளம் வழக்கின் விசாரணை தள்ளி வைப்பு

##Sathankulam, ##Dinakaran, ##HighCourt
19 Jul 2022 19.07.2022 | News 18 Tamil | க்ரைம் டைம் | வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேசியது மட்டும் | ஸ்ரீமதி மரணம் People's Watch in Media Chennai

News 18 Tamil | க்ரைம் டைம் | வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேசியது மட்டும் | ஸ்ரீமதி மரணம்

#Kallakurichi, #SriMathi, #News18TamilNadu, #VAC, #ViolenceAgainstChildren
18 Jul 2022 ‘Conduct joint inquiry’ People's Watch in Media Madurai

Madurai based Human Rights Organisation, People’s Watch, has urged the State Human Rights Commission, the State Commission for Women and the State Commission for Protection of Child Rights to conduct a joint inquiry into the death of a Class...

#TheHindu, #HenriTiphagne, #SriMathi, #Kallakurichi, #VAC, #ViolenceAgainstChildren
18 Jul 2022 பத்திரிகைச் செய்தி - இறந்து போன மாணவியின் மரணத்திற்கு காரணமான அனைவர் மீதும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். - ஜூலை 17 அன்று பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவங்களை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது. Press Releases Madurai

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். ஜூலை 13 அன்று காலை அப்பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்யச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள், ஆசிரியர்கள் மாணவியை படிக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்ததாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி மாணவி எழுதியதாக தற்கொலைக் கடிதம் ஒன்றையும் உறவினர்கள் முன் படித்துக் காட்டியுள்ளதாக அறிய முடிகிறது. அந்த கடிதத்தின் அடிப்படையில் அப்பள்ளி கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ........................ மக்கள் கண்காணிப்பகம் முன்வைக்கும் பரிந்துரைகள்: தமிழக மாநில மனித உரிமை ஆணையமும், மாநில குழந்தை உரிமைகள் ஆணையமும், மாநில பெண்கள் ஆணையமும் கூட்டாக இணைந்து மாணவி மரணம் குறித்து முழுமையான ஆய்வினை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு உண்மையாக நடந்தவை என்ன என்பதை அறியும் உரிமை உண்டு. காவல்துறையின் இறுதிக்கட்ட நடவைக்கைகள் மக்களின் உண்மை அறியும் தாகத்தை தணிக்கவில்லை, நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே தான் சட்டப்படி நிறுவப்பட்டுள்ள ஆணையங்கள் கூட்டாக இணைந்து உண்மை நிலையை கண்டறிந்து பொதுவெளிக்கு அறிவிப்பதும், சட்டரீதியான நடவடிக்கையை உறுதி செய்வதும் அவசியமாகிறது. இந்த சூழலை கவனத்தில் கொண்டு, மேற்கண்ட மூன்று ஆணையங்களின் தலைவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்ட உண்மையறியும் குழு உடனடியாக ஏற்படுத்தப்பட்டு விசாரணையை துரிதமாக தொடங்க வேண்டும். இக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அலுவலர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை இணைத்து இந்த ஆய்வினை முன்னெடுக்க வேண்டும். ஜூலை 13 முதல் – ஜூலை 16 வரை உயர் காவல்துறை அலுவலர்கள், உயர் கல்வித்துறை அலுவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? அவர்களின்  அலட்சியமே ஜூலை 17 வன்முறைக்கு காரணமாக இருக்குமோ என்று சந்தேகிக்க முடிகிறது. இவர்கள் மீதான கவனக்குறைவு குறித்து சிறப்பு விசாரணையை மாநில மனித உரிமை ஆணையம் நடத்திட வேண்டும்.

#Kallakurichi, #StudentDeath, #VAC, #ViolenceAgainstChildren
8 Jul 2022 India’s human rights record under scrutiny as NHRC prepares for renewal of accreditation with GANHRI SCA People's Watch in Media New Delhi

The Universal Periodic Review of India is due in 2022, the run-up to which has already started. This is an event where the National Human Rights Commission is most likely to get exposed.  NATIONAL Human Rights Institutions across the world are...

#HenriTiphagne, #SCA, #NHRC, #GANHRI, #NationalHumanRightsCommission, #Accreditation, #ICC
2 Jul 2022 People's Watch is attested : JOINT STATEMENT OF DEMOCRATIC GROUPS AND CONCERNED CITIZENS - FREE JOURNALIST MOHAMMAD ZUBAIR NOW! Press Releases New Delhi

People's Watch is attested : JOINT STATEMENT OF DEMOCRATIC GROUPS AND CONCERNED CITIZENS - FREE JOURNALIST MOHAMMAD ZUBAIR NOW!

#FreeMohammadZubair, #MohammadZubair, #Journalist, #HighCourtOrder, #DelhiHighCourtOrder, #AltNews
29 Jun 2022 மேலவளவு போராளிகள் பொதுக்கூட்டம் People's Watch in Media Madurai

மேலவளவு போராளிகள் பொதுக்கூட்டம் Byமாலை மலர்  29 ஜூன் 2022 3:31 PM மதுரையில் நாளை மேலவளவு போராளிகள் பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்துக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். மதுரை மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலவளவு போராளிகள் 25-ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் நாளை (30-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது. கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார். அலங்கை செல்வரசு, வி.பி.இன்குலாப் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ப.கதிரவன் வரவேற்று பேசுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் .அழகிரி, அமைச்சர் பி.மூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ் கனி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுக்கூர் ராமலிங்கம், எவிடன்ஸ் கதிர், ம.தி.மு.க. மதுரை மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன், அ.தி.ம.மு.க. தலைவர் பசும்பொன் பாண்டியன், எஸ். டி .பி. ஐ .மாநில தலைவர் நெல்லை முபாரக், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், மக்கள் சமூக நீதிப் பேரவை மாநில அமைப்பாளர் இரா.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்கள் மேலவளவு படுகொலை, அரசியல் அறியாமை, ஆதிகுடியினரின் அரசியல் உரிமை குறித்து கூட்டத்தில் பேசுகின்றனர். முடிவில் புதூர் பரமசிவம் நன்றி கூறுகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கிழக்கு தொகுதி செயலாளர் ஆ.கார்வண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

#Melavalavu, #VCK, #Thol.Thirumavalavan, #HenriTiphagne, #NellaiMubarak, #PublicMeeting, #மேலவளவு, #வி.சி.க, #திருமாவளவன்
28 Jun 2022 மதுரையில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான கருத்தரங்கம் People's Watch in Media Madurai

மதுரையில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான கருத்தரங்கம்  

#UNTortureDay, #Conference, #UNDayinsolidarityofTortureVictims


Join us for our cause