for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

27 Oct 2020 சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கு - ஹென்றி டிபேன் | 5 Minutes Interview | Sun News Press Releases

5 நிமிட பேட்டியில் சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கு 'சி.சி.டி.வி பதிவுகள் எங்கேயும் பேசப்படவில்லை ஏன்?' - மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிபேன் அவர்களுடன் நேர்காணல்... Courtesy: Sun News - https://www.youtube.com/watch?v=LCuTSZlMT5E

#media
7 Jun 2019 TEST People's Watch in Media Madurai

#media
7 Jun 2019 ’முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது’: உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்! People's Watch in Media Madurai

முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். இவர் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்டார். அதில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்று ஆதாரத்துடன் விளக்கினார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை அன்று இரவிலிருந்து காணவில்லை. கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆன நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு தரப்பினும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி, போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. முகிலன் காணாமல் போனது குறித்து சிபிசிஐடி, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மாயமான முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி ஹென்றி திபேன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் தகவலளித்துள்ளனர். ஆனால் அவரைப்பற்றிய விவரங்களை, அவர் குறித்த தகவல்களை, துப்புகளை வெளியில் சொன்னால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அதை வெளியிடவில்லை எனவும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஹென்றி திபென் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை 3 வாரத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

#ActivistMugilan, #HRDMugilan, #Mugilan, #HumanRightsDefender, #Sterlite, #PeoplesWatch, #HenriTiphagne, #HumanRightsDefenderMugilan, #NDTV
7 Jun 2019 CB-CID gets three more weeks to trace activist Mugilan People's Watch in Media Madurai

He went missing on February 15 after a press meet After being apprised of the progress made by the Crime Branch-Criminal Investigation Department (CB-CID) in tracing the whereabouts of environmental activist T. Mugilan alias Shanmugam who went missing...

#ActivistMugilan, #HRDMugilan, #Mugilan, #HumanRightsDefenderMugilan, #PeoplesWatch, #HenriTiphagne
7 Jun 2019 முகிலன் இருப்பிடம்! சீலிட்ட கவரில் விஷயம் இருக்கு! People's Watch in Media Madurai

சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் இன்றுடன் 112 நாட்கள் ஆகிறது.  முகிலன் காணாமல் போனது பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு செய்யப்பட்டது.  இந்தப் பின்னணியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றத்தில் வாய்தா வாங்கியது சிபிசிஐடி போலீசார்.  இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றத்தில் முகிலன் தரப்பில் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆஜரானார். அப்போது சிபிசிஐடி போலீசார் ஒரு சீலிட்ட கவரை நீதிபதியிடம் கொடுத்து முகிலன் சம்பந்தமாக முக்கியமான தகவல்கள் இதில் உள்ளது என கூறினார்கள். அந்த விபரங்களை பார்த்த நீதிமன்றம் முகிலன் வழக்கை நான்கு வாரத்திற்கு தள்ளி வைப்பதாக கூறினார்கள்.  அப்போது முகிலன் தரப்பு வழக்கறிஞர் இரண்டு வாரத்திற்கு மட்டும் தள்ளி வைத்து முகிலனை ஆஜர்படுத்த வேண்டும் என கூறினார்கள்.  சிபிசிஐடி தரப்பு மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்டதால் நீதிமன்றம் மூன்று வாரங்கள் தள்ளி வைத்து இதுதான் ஃபைனல் என கூறியது.  அனேகமாக அடுத்த விசாரணையின்போது முகிலன் சம்பந்தமான பிரச்சினைக்கு முழுமையான தீர்வை சிபிசிஐடி ஏற்படுத்தி கொடுக்கும் என தெரிகிறது. 

#ActivistMugilan, #Mugilan, #HumanRightsDefender, #HumanRightsDefenderMugilan, #HenriTiphagne, #PeoplesWatch, #Nakkheeran
7 Jun 2019 Missing anti-Sterlite activist Mugilan: CB-CID says it has got 'important lead' People's Watch in Media Madurai

CHENNAI: The CB-CID police probing the anti-Sterlite activist R S Mugilan missing case on Thursday informed the Madras high court that they have got “important lead” in the case. Additional public prosecutor R Prathap Kumar made the submission...

#TimesofIndia, #TheTimesofIndia, #TOI, #PeoplesWatch, #HenriTiphagne, #HumanRightsDefender, #Mugilan, #HRDMugilan
7 Jun 2019 Tamil Nadu: CB-CID informs Madras HC it has got 'clues' on missing activist Mugilan People's Watch in Media Chennai, Tamil Nadu

Chennai: The CB CID sleuths probing the 'disappearance' of environmental activist R.S. Mugilan, who involved himself actively in anti-Sterlite protests and other pro-people movements, has informed the Madras High Court on Thursday that they have got vital clues in the case....

#MumbaiMirror, #HenriTiphagne, #PeoplesWatch, #Mugilan, #HRDMugilan, #HumanRightsDefender, #HumanRightsDefenderMugilan
4 Jun 2019 105 நாட்கள்... எங்கே முகிலன்? நல்லக்கண்ணு, நெடுமாறன், திருமா ஆர்ப்பாட்டம் People's Watch in Media Chennai

சுற்றுச்சூழலியல் ஆர்வலர் முகிலன், சென்ற வருடம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 13 பேரை போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டு கொன்றது சம்பந்தமான ஆவன படமொன்றை சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் பிப்ரவரி 15ந் தேதி வெளியிட்டார்.   அன்று இரவிலிருந்து அவர் காணாமல் போனார். 105 நாட்கள் ஆகியும் முகிலன் இருப்பிடம் பற்றி எந்த முன்னேற்றத்தையும் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை. இந்த சூழலின் பின்னனியில் தான் ஏற்கனவே முகிலனை மீட்க கோரி பல போராட்டங்கள் நடத்திய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் இன்று 1 ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்பாட்டம் நடத்தியது.  கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் பழ.நெடுமாறன், தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமிஜெகதீசன், மார்க்ஸ்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. சி.மகேந்திரன், காங்கிரஸ் கோபன்னா,  ம.தி.மு.க. மல்லை சத்யா, வி.சி.க. திருமாவளவன், த.வா.க.வேல்முருகன் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தினர். என் கணவர் உயிருடன் இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்  என்ற கேள்வியுடன் முகிலன் மனைவி பூங்கொடியும் இதில் கலந்து கொண்டார்.

#PeoplesWatch, #Mugilan, #WhereIsMugilan, #Protest, #Demonstration


Join us for our cause