for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

22 Dec 2021 போலீஸ் விசாரணையில் மரணம்; இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கெடு: உயர்நீதிமன்றம் உத்தரவு People's Watch in Media Madurai

மதுரை : மதுரை அவனியாபுரம் போலீஸ் விசாரணையில் டிரைவர் மரணமடைந்தது தொடர்பான வழக்கில் டிச.,31க்குள் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சோலையழகுபுரம் முத்து கருப்பன்,'என் மகன் டிரைவர் பாலமுருகன். அவரை ஒரு கடத்தல் வழக்கு தொடர்பாக அவனியாபுரம் போலீசார் 2019 ல் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கினர். காயமடைந்த பாலமுருகன் அரசு மருத்துவமனையில் இறந்தார். சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். 'சம்பந்தப்பட்ட போலீசாரின் மிரட்டலால் மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற கிளை பதிவாளருக்கு கடிதம் வந்தது. இதனடிப்படையில் பதிவாளர்,'சம்பவம் தொடர்பாக வழக்கு பதிய வேண்டும். அதை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். இதை தானாக முன்வந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இவ்விவகாரத்தில் சிலருக்கு இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ பதிவின் ரகசிய அறிக்கையை உயர்நீதிமன்ற கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பு தாக்கல் செய்தது. இதை படித்து பார்த்த நீதிபதிகள் உத்தரவின்படி ஆதிநாராயணன் (மருது சேனை கட்சி தலைவர், அ.ம.மு.க.,கூட்டணியில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டவர்), மதுரை அகிம்சாபுரம் கதிர்வேல், சோலையழகுபுரம் ரமேஷ்குமார், வண்டியூர் யோகநாதன் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே விசாரணையில் முத்துக்கருப்பன் தரப்பு,'போலீசார் தாக்கியதில் பாலமுருகன் இறக்கவில்லை. விபத்தில் காயமடைந்து இறந்தார்,' என தெரிவித்தது.பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பு: வழக்கு விசாரணை ஜூனில் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆடியோ பதிவிலுள்ள குரல் மாதிரியை பரிசோதிக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கவில்லை. ஜன.,31 வரை கால அவகாசம் தேவை எனக்கூறி, விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை 'சீல்' இட்ட உறையில் வைத்து தாக்கல் செய்தது. நீதிபதிகள்: இதுவரை எத்தனை பேரை கைது செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். விசாரணை 2 ஆண்டுகளாகியும் முழுமையடையவில்லை. தாமதமின்றி விசாரணையை முடித்து டிச.,31 க்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேல் விசாரணையின்போது தேவையெனில் துணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்யலாம். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.

#Dinamalar, #PoliceTorture, #CustodialDeath, #Avaniyapuram, #BalamuruganCustodialDeath, #HighCourt, #MaduraiHighCourt, ##HighCourtOrder
22 Dec 2021 போலீஸ் விசாரணைக்கு சென்றவா் உயிரிழந்த வழக்கு: டிச. 31-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவ People's Watch in Media Madurai

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்றவா் உயிரிழந்த வழக்கில், டிச.31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயா்நீயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. மதுரை, சோலையழகுபுரத்தை ச் சோ்ந்த பாலமுருகனை, கடத்தல் வழக்கு விசாரணைக்காக, அவனியாபுரம் போலீஸாா் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அதன்பின்னா் பாலமுருகன் உயிரிழந்துள்ளாா். போலீஸாா் அடித்துத் துன்புறுத்தியதால் அவா் மரணமடைந்ததாகவும், பிரேத பரிசோதனையை விடியோ பதிவு செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரி பாலமுருகனின் தந்தை முத்து கருப்பன் உயா்நீயா் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். விசாரணை நிலுவையில் இருந்த போது, முத்துத் கருப்பன் தனது மனுவை வாபஸ் பெற்றளாா் போலீஸாா் அச்சுச் றுத்தல் காரணமாக முத்துத் கருப்பன் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக வழக்குரைஞா் ஹென்றிடிபேன், உயா்நீயா் நீதிமன்ற மதுரைக்கிளை நிா்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதினாா். அதனடிப்படையில், பாலமுருகன் மா்ம மரணம் தொடா்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என உயா்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளா் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே வழக்கு விசாரணையை உயா்நீயா் நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி முனிஷ்வா் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்யநாராயணாஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்குத் தொடா்பாக டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

#Dinamani, #Avaniyapuram, #AvaniyapuramPS, #CustodialDeath, #PoliceTorture, #BalamuruganDeath, #BalamuruganCustodialDeath
22 Dec 2021 File chargesheet in Avaniyapuram custodial death case by Dec 31: Madras HC People's Watch in Media Madurai

Warning that the court would not be liberal if the delay continues, the judges gave a deadline of 10 days for the CB-CID to complete the investigation and file chargesheet by December 31. MADURAI: Dissatisfied with the progress...

#IndianExpress, #TheNewIndianExpress, #HighCourt, #CustodialDeath, #Balamurugan, ##BalamuruganCustodialDeath, #AvaniyapuramBalamurugan
22 Dec 2021 போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம் : "விசாரணையை டிசம்பர் 31-க்குள் முடிக்க வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை People's Watch in Media Madurai

போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்ம மரணம் குறித்த விசாரணையை முடித்து, வரும் 31-ம் தேதிக்குள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பாலமுருகனை, கடத்தல் வழக்கு விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸ் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் பாலமுருகன் உயிரிழந்துள்ளார். போலீசார் அடித்து துன்புறுத்தியதால் பாலமுருகன்...

#ThanthiTV, #Avaniyapuram, #BalamuruganCustodialDeath, #CustodialDeath, #PoliceTorture
20 Dec 2021 Repatriation Of Dead Bodies: Draft Guidelines Submitted Before Madras High Court In Pudukkottai Fisherman's Case People's Watch in Media New Delhi

Repatriation Of Dead Bodies: Draft Guidelines Submitted Before Madras High Court In Pudukkottai Fisherman's Case The draft guidelines for repatriation of dead bodies have been prepared by Advocate Henri Tiphagne, counsel for the petitioner wife in the case...

#LiveLaw, #SriLankan, #Fisherman, #HighCourt, #HighCourtOrder, #MaduraiHighCourt
19 Dec 2021 Two Years Since Killing of Anti-CAA Protesters in UP, NHRC Conducts Spot Inquiry People's Watch in Media New Delhi

On December 19, 2019, 22 Muslims died in police firing, hundreds of dissenters were injured and property owned by Muslims was vandalised by the police. Two years after the Uttar Pradesh police allegedly killed 22 Muslims, caused grievous...

#TheWire, #NHRC, #AntiCAA, #UP
15 Dec 2021 Failure to curb sandalwood mafia led to death of tribal workers in Andhra: People's Watch People's Watch in Media Salem

A Madurai-based NGO’s fact-finding team on a recent incident involving the death of two Tamil Nadu labourers, who allegedly died after being taken in custody by the Andhra Pradesh forest officials, has said that, belonging to the scheduled tribal...

#CounterView, #RedSandal, #HenriTiphagne, #FactFinding, #APForest, #AP, #Labourers, #LabourersKilled, #Torture
15 Dec 2021 முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தற்கொலையா? விஷம் குடித்து இறந்தார் என்ற போலீஸாரின் விளக்கம் சந்தேகத்திற்குரியதா? People's Watch in Media Madurai

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தற்கொலையா? விஷம் குடித்து இறந்தார் என்ற போலீஸாரின் விளக்கம் சந்தேகத்திற்குரியதா? |Sathiyam Sathiyame|15-12-2021| சத்தியம் சாத்தியமே நிகழ்ச்சி  To watch video: https://youtu.be/mZqOo69w2TM

#Manikandan, #SathiyamTV, #CustodialDeath, #Muthukulathur, #PoliceTorture, #Ramanathapuram, #CustodialTorture
14 Dec 2021 ஏ.டி.ஜி.பிக்கு சரமாரி கேள்விகள் விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்? வழக்கறிஞர் ஹென்றி திபேன் #Redpix People's Watch in Media Chennai

ஏ.டி.ஜி.பிக்கு சரமாரி கேள்விகள் விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்? போஸ்ட்மார்ட்டத்தில் தில்லுமுல்லு - வழக்கறிஞர் ஹென்றி திபேன் பரபரப்பு பேட்டி Redpix யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி Video Courtesy: #Redpix To watch full video: https://youtu.be/YFHkRD6wGe0...

#Ramanathapuram, #CustodialDeath, #Redpix, #CustodialTorture, #PoliceTorture, #Manikandan, #YouTube, #HenriTiphagne
14 Dec 2021 Report of the fact-finding team on the death of two Tamil tribal workers in Andhra Pradesh People's Watch in Media Dharmapuri

Two Tamil Nadu labourers were killed in the custody of Andhra Pradesh forest officials. The joint conspiracy of Andhra Pradesh forest officials and police distract the case. Why is the Tamil Nadu Government keeping silent?, asks People’s Watch. A...

#CounterView, #RedSandal, #APForest, #AP, #FactFinding, #Labourers, #LabourersKilled, #FactFindingReport, #Torture


Join us for our cause