for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

31 Jan 2024 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு! People's Watch in Media

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி. எஸ். இராமன் ஆஜராகி, துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 தாசில்தார்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவது இந்த தருணத்தில் தேவையில்லை என்று வாதிட்டார்.  மேற்சொன்ன நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நாங்கள் தான் முடிவு செய்தோம் என நீதிபதிகள் தெரிவித்தபோது, நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை இப்போது வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் வரவிருக்கின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.  இது உண்மைக்குப் புறம்பானது.  ஏனெனில் கடந்த 18 அக்டோபர் 2022 அன்று அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் விளைவாக ஆணையிடப்பட்டு அதிகாரிகளின் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு, அதற்கான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த தகவல் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆகவே அரசுத் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் வேதாந்தா (ஸ்டெர்லைட்) குழுமத்தின் வழக்குகளில் ஆஜாராகாத வழக்கறிஞராக இருந்தால் சிறப்பு என்று மனுதாரர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தனது கருத்தைப் பதிவு செய்தார். வழக்கு பிப்ரவரி 21 மீண்டும் விசாரணைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #Thoothukudi, #ThoothukudiFiring, #ThoothukudiViolence, #NHRC, #ஹென்றி திபேன், #ஹென்றி டிபேன், #மக்கள் கண்காணிப்பகம், #தூத்துக்குடி, #தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, #தூத்துக்குடி வன்முறை, #தேசிய மனித உரிமை ஆணையம், #துப்பாக்கிச் சூடு
29 Jan 2024 விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்: அமுதா ஐஏஎஸ்-ன் விசாரணையில் நீதிமன்றம் புது உத்தரவு..! People's Watch in Media

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், சம்பவம் நடைபெற்ற நாளின் காவல் நிலைய சி.சிடிவி காட்சிகள் மற்றும் விசாரணை அறிக்கையை வழங்கக் கோரிய மனுவில், விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹென்றி இந்த வழக்கு விசாரணையின் போது உயர நீதிமன்றத்தில் அமுதா ஐஏஎஸ் அறிக்கை தருவதாக ஏற்கனவே அரசு தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே. அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரர் வசம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் சிசிடிவி காட்சிகள் வழங்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

#HenriTiphagne, #HenryTiphagne, #PeoplesWatch, #மக்கள்கண்காணிப்பகம், #ஹென்றிதிபேன், #ஹென்றிடிபேன், #பல்வீர்சிங், ##ASPபல்வீர்சிங், ##ஏஎஸ்பிபல்வீர்சிங், ##காவல்சித்திரவதை, ##பல்வீர்சிங், #Balveer, #BalVeerSingh, #CustodialTorture, #PoliceTorture


Join us for our cause