for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

ஆர்பாட்டம்

வன்கொடுமை தடை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தேசிய கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஈரோடு, வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்தும், பழங்குடி தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அரசியல் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டது. ஆர்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டலத் தலைவர் விநாயகமூர்த்தி, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

 





Join us for our cause